மக்களவையில் காவிரியை கிளப்பிய கர்நாடகம்;தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு-அவை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மக்களவையில் இன்று கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தகுமார் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகுறித்த பிரச்சினையைக் கிளப்பியதற்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்டஅமளியால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த பெங்களூர் பாஜக எம்பியான அனந்தகுமார்.

அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துநாடாளுமன்றத்தில் விவாதிக்க தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்.? இந்தப் பிரச்சினையில் பிரதமர்மன்மோகன் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என்றார்.

அனந்தக்குமாரின் பேச்சுக்கு தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.பதிலுக்கு கர்நாடக எம்.பிக்களும் குரல் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது.இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மாஜி பிரதமர் தேவேகெளடா தலைமையில், கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று காலைநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா கந்தி சிலை முன் காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு மணி நேரம்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+