காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர கர்நாடகம் முடிவு!
பெங்களூரூ:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மாநில சட்டம் மற்றும்சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு 136வது விதிப்படி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதேபோல 131வது விதிப்படி இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்படும்.
இதுதவிர தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் 5(3)வது பிரிவின் கீழ் நடுவர்மன்றத்திலும் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்படும்.
கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் உதய் ஹொள்ளாவின் ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ்.












Click it and Unblock the Notifications