ஆடுகளை வெட்டி ரத்தம் குடிக்கும் நூதன விழா
திருச்சி:திருச்சி புதூரில் ஆடுகளை வெட்டி ரத்தம் குடிக்கும் வினோத் திருவிழா நடந்தேறியது.
திருச்சி புதூரில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாகநடைபெறும்.
இந்த திருவிழாவின்போது, நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை பக்தர்கள் குடிப்பார்கள்.
இந்த ஆண்டும் நான்கு நாள் குட்டிக் குடி திருவிழா வெகு விமரிசையாக தொடங்கி நடந்தது. விழாவின் கடைசி நாளான இன்று நூற்றுக்கணக்கானஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பிடித்து பருகினர்.
ஆடுகளின் ரத்தம் குடிப்பதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். இந்த ரத்தம் குடிக்கும் திருவிழா கடந்த பலநூற்றாண்டுகளாக இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
கோவிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஆடுகளை கோவில் தலைமை பூசாரி பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி ரத்தத்தை பக்தர்களுக்குகுடிக்கக் கொடுத்தார்.
இந்தக் கோவிலில் தமிழக அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் ஆடுகள் காணிக்கையாக தரப்பட்டு பலி கொடுக்கப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆடு வெட்டி ரத்தம் குடிக்கும் விழாவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications