குவாத்ரோச்சி திடீர் மாயம்!

Subscribe to Oneindia Tamil

பியூஸ் அயர்ஸ்:அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த குவாத்ரோச்சி திடீரென ஹோட்டலைக் காலி செய்து விட்டுதலைமறைவாகி விட்டார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போபர்ஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஓட்டாவியா குவாத்ரோச்சி சமீபத்தில் வேறு வழக்கில் அர்ஜென்டினாபோலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்காக சிபிஐகுழு பியூனஸ் அயர்ஸ் சென்றுள்ளது.

இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குவாத்ரோச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவரை ஹோட்டலை விட்டுவெளியேறக் கூடாது என்று அர்ஜென்டினா அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலயிைல் நேற்று இரவு தனது அறையைக் காலி செய்து விட்டு குவாத்ரோச்சி அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறி விட்டார். அவர் எங்குசென்றார் என்பது தெரியவில்லை.

குவாத்ரோச்சி திடீரென ஹோட்டலை காலி செய்து விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+