விலைவாசியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை:விலைவாசி கண்டித்து வரும் 21ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடும்பத்திற்கு தேவையான பொருட்களின் விலை கட்டுகடங்காமல் ஏறி வருவதால் ஏழைகளும் நடுத்தர மக்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.வருமானம் அதிகரிக்காமல் செலவு அதிகரித்துள்ளதால் தங்களின் வாழ்க்கை தரத்தை குறைத்துக் கொள்கின்றனர்.
மேலும் விலைவாசி உயர்வு என்றாலே ஏழையின் வருமானத்தை பங்கிட்டு பணக்காரரிடம் சேர்ப்பதே ஆகும். ஏழை, பணகாரன் என்றவேற்றுமையை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கச் செய்யும், இது ஒரு சமதர்ம ஆட்சிக்கு உகந்தததல்ல.
இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து வரும் 21ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணிவரை மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துசென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications