காவிரி-சசியின் கணவர் நடராஜன் நடைபயணம்!
சீர்காழி:காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் பூம்புகாரிலிருந்து நடைபயணம்துவக்கியுள்ளார்.
காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் இந்த நடை பயணம் நடத்தப்படுகிறகு. பூம்புகாரில் தொடங்கி மேட்டூர் வரை 14நாட்கள் இந்த நடை பயணம் நடக்கும்.
இந்த நடை பயணத்தின் துவக்க நிகழ்ச்சிக்கு நாகப்பட்டிணம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பூம்புகார் ஊராட்சிமன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த நாகரத்தினம், பாகமவைச் சேர்ந்த கவுன்சிலர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான கூத்தக்குடி சண்முகம் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
சினிமா பாடலாசிரியரும் சசிகலாவின் உறவினருமான ஸ்னேகன், நடராஜனின் வலதுகரமான திருச்சி வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
இதையடுத்து பூம்புகாரில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்த நடராஜன் தனது நடைபயணத்தை துவக்கினார். அவருடன் சிலவிவசாயிகளும் அவரது ஆதரவாளர்களும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, தொட்டியம், பவானி வழியாக வரும் 25ம் தேதி இந்தக் குழு மேட்டூர் சென்றடையும்.












Click it and Unblock the Notifications