திருச்சியில் பிடிபட்டவர் புலிகளின் தளபதி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சியில் சமீபத்தில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ராகுலன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்ட கடற்படைத் தளபதி என்பது தெரிய வந்துள்ளது.

திருச்சியில் சமீபத்தில் அருள்சீலன் என்ற இலங்கைத் தமிழரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பணம்பறிமுதல் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்க இந்தப் பணம் தனக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் தங்கியிருந்த ராகுலன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் புலிகளுக்குவழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாலரை டன் இரும்புக் குண்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுலன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதியாம். பல்வேறுநாடுகளுக்கும் போய் ஆயுதங்களை வாங்கி வருவது இவரது முக்கியப் பணி. அடிக்கடி தமிழகத்திற்கு வருவாராம்.

மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இவருக்கு பலருடன் தொடர்பு இருப்பதால் மும்பை உள்ளிட்டஇடங்களுக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+