கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முதல்வர் கருணாநிதியின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. புரளி கிளப்பிய நபரைப்பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வரின்வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு அந்த நபர் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது. உடனடியாக மோப்ப நாய் சகிதம், போலீஸார் முதல்வரின் வீட்டுக்கு விரைந்தனர். அங்குதீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டுத் தகவல் புரளி எனத் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்ற வேட்டையில் போலீஸார் இறங்கினர். அந்தத் தொலைபேசி டாடா பொதுத்தொலைபேசியிலிருந்து 1 ரூபாய் நாணயம் போட்டு பேசப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் பகுதியிலிருந்துதான் போன் வந்துள்ளது. எனவேகுற்றவாளி அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என போலீஸார் கருதுகின்றனர்.

அறிவாலயம் வந்த இலங்கை ஆசாமி:இதற்கிடையே, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த இலங்கைநபரை கியூ பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+