கோடை கால ஸ்பெஷல்-6 சிறப்பு ரயில்கள்!
சென்னை:கோடை விடுமுறை காலத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தென்னக ரயில்வே 6 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.இந்த ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை இயக்கப்படவுள்ளன.ரயில்கள் விபரம்:1. சென்னை-நாகர்கோயில் (வாரம் ஒருமுறை) சிறப்பு ரயில். இந்த ரயில் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.15க்கும்,நாகர்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30க்கும் புறப்படும்.
2. திருச்சி-சென்னை (வாரம் ஒரு முறை ) சிறப்பு ரயில். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை திருச்சியில் இருந்து இரவு 9 மணிக்கும், சென்னையில் இருந்துபுதனகிழமைகளில் இரவு 11.15க்கும் புறப்படும்.
3. கோயம்புத்தூர்-நாகர்கோயில் (வாரம் ஒரு முறை ) சிறப்பு ரயில். இது கோயம்புத்தூரில் இருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 11.15 க்கும்,நாகர்கோயிலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 10 மணிக்கும் புறப்புடும்.
4. சென்னை-நாகர்கோயில் (வாரம் ஒரு முறை) ரயில். இது சென்னையில் இருந்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்கும், நாகர்கோயிலில் இருந்துசெவ்வாய்கிழமை பகல் 1.30க்கும் புறப்படும்.
5. சென்னை -தூத்துக்குடி (வாரம் ஒரு முறை) ரயில். இது சென்னையில் இருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 7 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்துபுதன்கிழமைகளில் மாலை 3 மணிக்கும் புறப்படும்.
6. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் (வாரம் ஒரு முறை) சிறப்பு ரயில். இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்துவெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30க்கும் புறப்படும்.












Click it and Unblock the Notifications