விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூரில், விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 மாதக் கர்ப்பிணி உள்ளிட்ட 4 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் விபச்சார வேட்டையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில், வேலூர் பஸ் நிலையப் பகுதியில் போலீஸார்விபச்சார அழகிகளைப் பிடிக்க ரோந்து சென்றனர்.
அப்போது ஜான் ரூபன் மற்றும் ஜெயா ஆகிய இருவரும், வர்ரீங்களா என்று ஆண்களிடம் கேட்டு விபச்சாரத்திற்கு ஆள் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களைப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத்திற்குவிரைந்த போலீஸார் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ரிபக்கா, சித்ரா, லதா, பிரியா ஆகிய நான்கு பெண்களைக் கைது செய்தனர்.
இவர்களில் சித்ரா 8 மாத கர்ப்பிணி என்று தெரிந்தபோது போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications