இந்திய வீரர்களின் உருவப் படம் எரிப்பு!
ஜலந்தர்:வங்கதேச அணியிடம் மோசமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உருவப் படங்களை தீயிட்டுக் கொளுத்தி பல்வேறுஊர்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடம் மோசமாக ஆடி தோற்றது. கோப்பைக் கனவில்மிதந்து கொண்டிருக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரமடைந்த பல ரசிகர்கள் இந்திய வீரர்களைக் கண்டித்து பல பகுதிகளில் போராட்டத்தில்குதித்தனர்.
ஜலந்தர் நகரில் கம்பெனி பாக் என்ற இடத்தில் இந்திய வீரர்களின் உருவப் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டமும்நடந்தது.
வீரேந்திர ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களின் படங்களே அதிகம் கொளுத்தப்பட்டன.
அதேபோல பாட்னாவிலும் இந்திய வீரர்களின் படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications