அரசு கெஸ்ட் ஹவுஸில் ஷக்கலக்க ஆட்டம்
திருச்சி:திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே அரசு விருந்தினர் மாளிகையில் ஆடிப் பாடி கும்மாளம் போட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
உப்பிலியாபுரம் பகுதியில் புளியஞ்சோலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இதையொட்டி இங்கு அரசு விருந்தினர் மாளிகை (கெஸ்ட் ஹவுஸ்)உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த 11 பேர் 2 நாட்களுக்கு முன்பு இங்கு வந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள். இரவில் விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தங்களது கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அறையில் சினிமா பாடலை சப்தமாக ஒலிக்க விட்ட அவர்கள்,அதற்கேற்ப ஆடத் தொடங்கினர். அந்தக் குழுவில் இருந்த 3 பெண்களும் படு ஆபாசமான அசைவுகளுடன், அரைகுறை உடைகளுடன்ஆடியுள்ளனர்.
இதைப் பார்த்த விருந்தினர் மாளிகை காவலாளி சேகர் அதை தடுக்க முயலாமல், அவர்களுடன் சேர்ந்து ஆட்டத்தை ரசித்துள்ளார். அவர்களுக்குத்தேவையானதை செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆபாச ஆட்டம், பாட்டம் குறித்த தகவல் போலீஸாருக்குச் சென்று போலீஸார் விரைந்து வந்து, உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த செல்வி, சந்தியா, மீனா, பெருமாள், செல்வராஜு, செல்வரத்தினம், மோகன், பன்னீர் செல்வம், ராமலிங்கம், செல்வராஜ், தனபால்ஆகியோரை கைது செய்தனர். காவலாளி சேகரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications