காந்தியை ஜெ அவமதித்து விட்டார்-இளங்கோவன்
சென்னை:அரசியல் லாபத்திற்காக உண்ணாவிரதம் இருந்து, மகாத்மா காந்தியடிகள் கடைப்பிடித்த உன்னதமான சத்தியாகிரக இயக்கத்தை அவமானப்படுத்திவிட்டார் ஜெயலலிதா என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சத்தியாகிரக நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்ணாவிரதம் போன்ற அறப் போராட்டங்களை நாட்டின்சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியடிகள் கடைப்பிடித்தார். காங்கிரஸ் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆயுதமாக அவற்றைப்பயன்படுத்தினர்.
பொது நலனை முன்னிட்டு அந்த அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் நாட்டின் தந்தையான காந்தியடிகள் கடைப்பிடித்த அந்தஅமைதிப் போராட்டத்தை, மாபெரும் இயக்கத்தை, அவமானப்படுத்தி விட்டார் ஜெயலலிதா. அரசியல் லாபத்திற்காக, சத்தியாகிரகப்போராட்டத்தை அவமதித்து விட்டார்.
தமிழகத்தில் யாரும் காங்கிரஸ் கட்சியை தங்களது அடிமை என்று நினைத்து விடக் கூடாது. சில கொள்கைகளுக்காக காங்கிரஸ் கட்சிபொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மக்கள் பிரச்சினைகளில் முதலில் வந்து நிற்பது காங்கிரஸ் கட்சிதான். அதிலிருந்து எப்போதும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். தமிழகத்தில்காமராஜர் ஆட்சி மலரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டும். இந்த லட்சியத்தை அடையும் நோக்கில் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல தலைவர் கிருஷ்ணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முயற்சியில் அவருடன்சேர்ந்து செயலாற்ற, ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்.
பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸ் தோற்றதில் ஆச்சர்யம் இல்லை. தோல்வி காங்கிரஸுக்குப் புதிதில்லை. இதுபோல பல தோல்விகளை கட்சிசந்தித்துள்ளது. ஆனால் இதெல்லாம் மாறும். எதிர்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டையே தனது சொந்த பலத்தால் காங்கிரஸ் ஆளும் காலம்வரும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications