நடுக்கடலில் கடற்படையினருடன் மீனவர்கள் மோதல்
அறந்தாங்கி:நடுக்கடலில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருடன் தமிழக மீனவர்கள் மோதலில் ஈடுபட்டானர்.
அறந்தாங்கி ஜெகதாபட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அன்பரசன், ஆறுமுகம் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் வலைவீசிமீன்பிடித்த அவர்கள் வலையில் எதிர்பார்த்த படி மீன்கள் சிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடிப்பு வலையை வீசினர். இரட்டை மடிப்பு வலை வீசினால் அதிக மீன் குஞ்சுகள்பிடிபடும். இதனால் கடலில் மீன்வளம் குறையும் என்பதால் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த கடலோர பாதுகாப்பு படையினர் இரட்டை மடிப்பு வலை வீசக் கூடாது என எச்சரித்தனர். இதனால்மீனவர்களுக்கும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் இடையே நடுக்கடலில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் கடலில் விரிக்கப்பட்டிருந்த இரட்டை மடிப்பு வலைகளை அறுத்து விட்டு அவர்களை விசாரணைக்கு அழைத்துசென்றனர்.
விசாரணை முடிந்து திரும்பிய மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மீனவர்களிடம் கூறினர். இதையடுத்து ஜெகதாபட்டினம்விசைப்படகு மீனவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்துவிசாரணை நடத்தப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். மீனவர்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications