ஜெ.வுக்கு போட்டியாக மாண்டியாவில் போராட்டம்
மாண்டியா:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் போட்டியாக நேற்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரி ஜெயலலிதா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். 21ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் போராட்டத்துக்குப் போட்டியாக நேற்று காவிரி மாவட்டமான மாண்டியாவில் விவசாயிகள் சங்கம் சார்பில்உண்ணாவிரதம் இருந்தனர்.
காவிரி ஹிதரக்ஷனா சமிதி என்ற அந்த அமைப்பின் தலைவர் மாதே கெளடா தலைமையில் சில்வர் ஜூப்ளி பூங்கா பகுதியில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஜெயலலிதாவின் போராட்டத்தைக் கண்டித்து மைசூர்-பெங்களூர் மார்க்கத்தில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடந்தன.
நான்கு ரயில்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இதேபோல மைசூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்சாலையிலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மைசூரிலும் போராட்டங்கள் நடந்தன. தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய காவிரிப் பாசனமாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications