காவிரி: கட்சிகளுக்கு வக்கீல்கள் கருத்தின் நகல்
சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட 90 நாட்கள் காத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து உச்சநீதிமன்றவழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களின் நகல்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகிறதுஅதிமுக. அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைக் கோரி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தித்தான் நேற்று ஜெயலலிதா சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதில்சட்ட சிக்கல் உள்ளது. அப்படி வெளியிட்டு விட்டால் அதுவே இறுதித் தீர்ப்பாகி விடும், அதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது என்றுதமிழக அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட 90 நாட்கள் காத்திருக்க வேண்டியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்பராசரன், பி.பி.ராவ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்க நகலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக அரசு அனுப்பிவைத்துள்ளது.
பராசரன் அளித்துள்ள விளக்கத்தில் பல்வேறு சட்ட பிரிவுகளை மேற்கோள் காட்டி நீண்ட விளக்கம் தந்துள்ளார். அதில், 3 மாத காலம்முடிவடைவதற்கு முன், பன்மொழி மாநில நதி நீர் தாவா சட்டம், பிரிவு 6ன்படி, நடுவர் மன்றத் தீர்ப்பினை அறிவிக்கை செய்யும்படி கேட்பது,பிரச்சினையில், சம்பந்தப்பட்ட எந்த மாநில அரசுக்கும் பொருத்தமான செயலாக இருக்காது.
அந்த சட்டப்பிரிவு 5(3)ல் குறிப்பிட்டுள்ளபடி நடுவர் மன்றத்திடம் மனு செய்து கொள்வதற்கான காலம் முடிவடைவதற்கு முன்பு, பிரிவு 6ன்படிஉடனடியாக அறிவிக்கை செய்வதை மத்திய அரசு தனது கடமையாக செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் பி.பி. ராவ் அளித்துள்ள விளக்கத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications