இந்திய கடற்படை பயம்-கடலில் குதித்து அகதி பலி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:இந்திய கடற்படையினரைப் பார்த்து விட்டதால் கடலில் குதித்த இலங்கை அகதி பரிதாபமாக பலியானார்.

இலங்கையிலிருந்து அதிக அளவில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுபோல அகதிகளாக படகுகளில் வருபவர்கள்,ஒரு படகுக்கு 30 பேர் மட்டுமே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் இதற்கும் அதிக அளவில் சில நேரங்களில் அகதிகளை அழைத்து வருகின்றனர். இந்தநிலையில் இலங்கையிலிருந்து ஒரு படகில் 32 பேர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடலில் அந்தப் படகு வந்தபோது தொலைவில் இந்திய கடற்படை ரோந்துப் படகு வந்துள்ளது. இதைப் பார்த்த படகை ஓட்டி வந்த மீனவர்கள்,அகதிகளில் இருவரை கடலில் குதிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து திவாகரன், பாஸ்கரன் ஆகிய இருவரும் கடலில் குதித்துள்ளனர். இவர்களில் திவாகரன் நீந்திக் கரை சேர்ந்து விட்டார். ஆனால்பாஸ்கரன் பரிதாபமாக கடலில் மூழ்கி இறந்தார். அவரது உடல் இன்று காலை ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்தியக் கடற்படைக்குப் பயந்து அகதி ஒருவர் கடலில் குதித்து பரிதாபமாக பலியானது அவருடன் வந்த அகதிகளிடையே பெரும் சோகத்தைஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+