சூரிய கிரகணம்-நாடு முழுவதும் கோவில்கள் மூடல்
சென்னை:இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி காலை 6.08 மணி முதல் 9.55 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. இதனை மத்திய ஆசியா, கிழக்காசியா மற்றும் அலாஸ்காஆகிய பகுதிகளில் காண முடிந்தது.
இந்தியாவில் இதை பாதியளவே காண முடிந்தது. இந்தியாவில் இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 7.23 வரை நீடித்தது.
இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் இதைப் பார்த்து ரசித்தனர். இந்தஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறுவர், சிறுமியர்உள்பட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தனர்.
இதற்காக நான்கு தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 2,500 பேர் வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் சூரியகிரகணத்தைப்பார்த்தனர்.
டெல்லியில் சூரிய கிரகணம் 57.3 சதவீதம் தெளிவாகத் தெரிந்தது. சென்னையில் 24.6 சதவீதமே தெரிந்தது.
இன்னும் ஒரு சூரிய கிரகணம் இந்த ஆண்டே ஏற்படவுள்ளது. அதன் பின்னர் 2043ம் ஆண்டு முழு அளவிலான சூரிய கிரகணம் நிகழவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வருவதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் சூரியனை சந்திரன்மறைக்கிறது.
கோவில்கள் மூடல்:
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை மூடப்பட்டிருந்தன.
அதேபோல சபரிமலை அய்யப்பன் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்களின் நடையும் காலை 8 மணி வரைமூடப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications