திருச்சி: நவீன துப்பாக்கிகள், லாஞ்சர்கள் தயாரிப்பு
திருச்சி:திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமும் (டி.ஆர்.டி.ஓ), திருச்சி ஆயுதத் தொழிற்சாலையும் இணைந்து இந்த நவீன துப்பாக்கிகள் மற்றும்லாஞ்சர்களைத் தயாரிக்க உள்ளன.
முதல் கட்டமாக நான்கு வகை அதி நவீன ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியப் பாதுகாப்புப் படையின் பயன்பாட்டுக்காக இவைதயாரிக்கப்படவுள்ளன.
14.5 எம்.எம். மற்றும் 20 எம்.எம். வகை வித்வன்சக் என்று பெயரிடப்பட்டுள்ள துப்பாக்கிகள், 40 எம்.எம். மல்டி கிரனேட் லாஞ்சர், 38 எம்.எம்.லாஞ்சர் ஆகியவை தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களாகும். இதுதவிர 40 எம்.எம். பேரல் கிரனேட் லாஞ்சரும்உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை விட இவை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்படவுள்ளன.
14.5 எம்.எம் துப்பாக்கியால் 1,800 மீட்டர் தொலைவிலான இலக்கை சுட முடியும். 20 எம்.எம் துப்பாக்கியால் 1,300 மீட்டர் தொலைவில் உள்ளஇலக்கை குறி பார்த்து சுட முடியும்.
இந்த துப்பாக்கிகள் மூலம் எதிரிகளின் பதுங்கு குழிகள், ரேடார் கருவிகளை சுட்டுத் தகர்க்க முடியும்.
கடந்த மாதம் இவற்றின் தயாரிப்பு தொடங்கியது. எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 100 துப்பாக்கிகளைத் தயாரித்துக் கொடுக்க தற்போது ஆர்டர்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு இந்த ஆயுதங்களை கொடுப்பதற்கு முன்பு பல்வேறு கட்டத்தில் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
40 எம்.எம். மல்டி கிரனேட் லாஞ்சர் (இதன் பெயர் உக்ரா-40) மூலம், நிமிடத்திற்கு 12 சுற்று சுட முடியும். 375 மீட்டர் தொலைவிலான இலக்கைதாக்கித் தகர்க்க முடியும். ஒரு அடி அகலம் கொண்ட சிமென்ட் சுவரையும் கூட துளைத்தெடுக்கும் வகையிலான திறன் படைத்தது.
தீவிரவாதிகள், நக்சலைட் வேட்டைக்கு இந்த லாஞ்சர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த வகை நவீன ஆயுதங்களை தயாரித்துத் தருமாறு கடற்படையும், ராணுவமும் கோரியுள்ளன. அடுத்த ஆண்டு முதல் இவற்றுக்கான தயாரிப்புதொடங்கவுள்ளதாக திருச்சி ஆயுதத் தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications