திமுகவை விமர்சிக்க பாமகவினருக்கு ராமதாஸ் தடை
சென்னை:திமுக குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பாமகவினர் யாரும் விமர்சித்துப் பேசக் கூடாது என்று அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தடைவிதித்துள்ளார்.
சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும், மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.இதற்குப் பதிலளித்த வீரபாண்டி ஆறுமுகம், பாமகவுக்கு மேற்குப் பகுதியில் முகவரி கொடுத்ததே திமுகதான் என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.
இதனால் பாமக, திமுக இடையிலான மோதல் சூடு பிடித்துள்ளது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ராமதாஸ், சம்பந்தப்பட்ட 3எம்.எல்.ஏக்களையும் அழைத்து விசாரித்தார்.
அப்போது எதுவாக இருந்தாலும் திமுக குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் எந்த விமர்சனத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் அமைதிகாக்குமாறும் அந்த எம்.எல்.ஏக்களிடம் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், சேலம் மாவட்ட பாமக எல்.எல்.ஏக்கள் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். தாங்கள்தொடர்ந்து அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக அப்போது குமுறல் வெளியிட்டனர்.
திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகும் எண்ணத்தில் அவர்கள் பேசவில்லை. தங்களது ஆதங்கத்தையே வெளியிட்டிருந்தனர். பின்னர்அவர்களிடம் ராமதாஸ் பேசுகையில், எக்காரணம் கொண்டும் ஆளுங்கட்சியினர் குறித்து விமர்சிக்க வேண்டாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்என்னிடம் கூறுங்கள் என்றார் என்று தெரிவித்தார் மணி.












Click it and Unblock the Notifications