இந்திய எல்லையில் கடலோர காவல் படை-தமிழக போலீஸார் இன்று கூட்டு ரோந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:இந்திய கடல் எல்லையில் கடலோரக் காவல் படையும், தமிழக போலீஸாரும் இணைந்து இன்று வெள்ளோட்ட கூட்டு ரோந்துப் பணியில்ஈடுபடுகின்றனர்.

இந்திய, இலங்கை கடல் எல்லையில், மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் சமீப காலமாகஅதிகரித்து வருகிறது.

இதற்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியக் கடற்படையுடன் சேர்ந்து இலங்கை கடற்படைகூட்டு ரோந்து செல்லலாம் என்று இலங்கை யோசனை தெரிவித்தது.

இதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம், இந்த கூட்டு ரோந்து குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும்எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய கடலோரக் காவல் படையும், தமிழக காவல்துறையும் இணைந்து கூட்டு ரோந்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இன்றுவெள்ளோட்ட கூட்டு ரோந்து நடைபெறவுள்ளது.

இதற்காக தமிழக போலீஸார் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 30 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இருதரப்பும் இணைந்து இன்று முதல் கூட்டு ரோந்தில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையிலிருந்து மண்டபம் வரை இந்த கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள 12 கடலோர காவல் நிலையங்களுக்குத் தேவையான 24 நவீன ரோந்துப்படகுகள் (ஹோவர்கிராப்ட்) வெளிநாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+