ஓய்வு பெற்றார் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்தார். நேற்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்துஉச்சநீதிமன்ற வளாகத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் லட்சுமணனைப் பாராட்டிப் பேசினர்.

சில நாட்களுக்கு முன்புதான், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லட்சுமணனுக்கு மிரட்டல்விடுத்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் குறித்து நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடி தெரிவித்த லட்சுமணன் வழக்கை விசாரிக்கவிரும்பவில்லை என்று கூறி அதிலிருந்து விலகினார்.

இந்ததப் பின்னணியில் நேற்று நடந்த பிரிவுபச்சார விழாவின் போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், மிரட்டல்கடிதம் குறித்த தகவல்களை இப்போதாவது நீதிபதி லட்சுமணன் வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.ஆனால் அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை என்று கூறி விட்டார் லட்சுமணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+