வயாகரா பவுடரைக் கடத்தி வந்த விமான பயணி
சென்னை:துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வயாகரா பவுடரை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மும்பையை சேர்ந்தமுகமது கவுஸ் (39) என்ற பயணியின் சூட்கேஸில் ஏராளமான பார்சல் இருந்தது.
இதை அதிகாரிகள் திறந்து பார்க்க முயற்சி செய்த போது கவுஸ் தடுத்தார். இதில் ஓட்ஸ், பால் பவுடர்தான் இருப்பதாக கூறினார். ஆனால் சந்தேகம்அடைந்த அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
கவுஸிடமிருந்த 7 பார்சல்களில் ஒருவித போதை பவுடர் இருந்தது. 6 கிலோ எடை கொண்ட இந்த போதை பவுடரின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.இதை ஊக்க மருந்து தயாரிக்கவும், வயாகரா மாத்திரை தயாரிப்பதற்கும் இந்த பவுடர் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த பவுடரை இறக்குமதி செய்யலாம். ஆனால் அனுமதி இன்றி பாங்காங்கில் இருந்து துபாய் வழியாகசென்னைக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார் கவுஸ். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications