ரூ. 5 கோடி கேட்டமைன் கடத்தல்: 2 பேர் கைது
சென்னை: மலேசிய விமானத்தில் பயணம் செய்யவிருந்த இரு சகேதாரர்கள், ரூ.5 கோடி மதிப்புள்ள 50 கிலோ கேட்டமைன் போதைப் பொருளைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, 2 பயணிகளின் உடமைகைள சோதனை செய்த போது 25 பாக்கெட் சலவை தூள் இருந்தது. இதனுள் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் மற்றும் போதைப் பொருளாக பயன்படுத்தப்படும் கேட்டமைன் குளோரைடு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கேட்டமைன் போதை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
கேட்டமைனைக் கடத்தியதாக இரு பயணிளையும் கைது செய்தனர். விசாரைணயில் இருவரும் சகோதர்ரகள், மும்பையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications