இளம் வீரர்களை தடுத்த சீனியர்கள்: சேப்பல்
டெல்லி: உலக கோப்பையில் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டபோது இளம் வீரர்களை தேர்வு செய்ய விடாமல் சீனியர் வீரர்கள் தடுத்துவிட்டனர் என அணியின் பயிற்சியாளர் சேப்பல் கூறியுள்ளார்.
![]() |
தனது நண்பரான மூத்த பத்திரிக்கையாளர் ராமனுக்கு அவர் அனுப்பியுள்ள எஸ்எம்எஸ்சில்,
அணியின் தேர்வு குழுவினர் இளம் வீரர்களை தேர்வு ெசய்யாமல் மூத்த வீரர்களையே தேர்வு செய்தனர். இளம் வீரர்களை தேர்வு செயய்ய மூத்தவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கி கொள்வதிலேயே தீவிரம் காட்டினர். மூத்த வீரர்கள் பேச்சையே அணி நிர்வாகமும் கேட்டது.
அணியில் இளம் வீரர் சுரேஷ் ரைய்னா இடம் பெறவில்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.அவருக்கு நம் அணியை வழி நடத்தி செல்லும் திறமை உள்ளது. ஆனால், இந்த யோசனை ஏற்கப்படவில்லை.
![]() |
யுவராஜ் சிங் தன்னை இப்போதே ஏதோ பெரிய நட்சத்திர வீரராக நினைத்து கொண்டிருக்கிறார். அது தவறு. அவர் வளரும் வீரர்தான் என்று வெறுத்துப் போய் கூறியுள்ளார் சேப்பல்.
இதுக்குறித்து கருத்து தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரன்ஜன் ஷா மறுத்துவிட்டார். இதைப்பற்றி சாப்பலிடம் விசாரித்த பின் கருத்து கூறுவதாக தெரிவித்தார்.மேலும் நாடு திரும்பும் நம் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications