வைகோ குறித்த பேச்சு: காங்-மதிமுக எம்எல்ஏக்கள் அடிதடிக்கு முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய கருத்தால் மதிமுக எம்.எல்.ஏக்கள் கோபமடைந்தனர். அவர்களை அடிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் பேசுகையில், ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபட ேவண்டும்.

எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் விரோதமான நடவடிக்கையில் மதிமுக ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் செய்யாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், வைேகா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மதிமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்

சுதர்சனம் பேசிய கருத்துக்குப் பதில் கூற இளவரசன் எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். போளூர் வரதன் எழுந்து, வைகோ குறித்து ஒரு கருத்தைக் கூறினார். இதற்கு மதிமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ேடார் வீர இளவரசனை நோக்கி அடிக்கப் போவது போல பாய்ந்தனர்.

இதனால் அவையில் பெரும் அமளியும், பரபரப்பும் ஏற்பட்டது. அருகில் இருந்த பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இரு தரப்பினரையும் அைமதிப்படுத்தி அமர வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+