12 வயது சிறுசுகள் போட்ட கடத்தல் நாடகம்
சென்னை:சென்னை நகரை சுற்றிப் பார்க்க சைக்கிளில் கிளம்பிய 3 சிறுவர்கள், பஸ்சில் ஏறி பாதை மாறி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், பயத்தில் தங்களைக் கடத்தி விட்டதாக பெற்றோரிடம் நாடகமாடி போலீஸாரிடம் சிக்கினர்.
சென்னை அடையார் பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் சுரேந்திரன், திருவான்மியூர் பாண்டியன் என்பவரின் மகன் உதயசங்கர், கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த மாணிக்கத்தின் பாண்டியன் ஆகியோர் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். 3 பேருக்கும் 12 வயதாகிறது.
புதன்கிழமை இரவு சைக்கிளில் மூன்று பேரும் அப்படியே ஹாயாக கிளம்பினர். சென்னை நகரம் இரவில் ஜொலி ஜொலிக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் அதைப் போய் பார்த்து ரசித்து விட்டு வரலாம் என அவர்கள் கிளம்பினர்.
ஆனால் வழியில் சைக்கிள் பஞ்சராகி விட்டது. இதையடுத்து மூன்று பேரும் சைக்கிளை ரோட்டோரம் போட்டு விட்டு பூந்தமல்லி செல்லும் பஸ்சில் ஏறி விட்டனர். கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, பஸ்சின் போர்டில் எழுதப்பட்டிருந்த குமணன் சாவடி என்ற பெயரைப் பார்த்து விட்டு அங்கு கொடுங்க என்று கேட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு பஸ்சில் அமர்ந்தனர்.
குமணன் சாவடி வந்தவுடன் 3 பேரும் இறங்கினர். அடுத்து என்ன செய்வது என்ற பயம் அப்போதுதான் வந்தது. இரவு நேரமாகி விட்டதால் எங்கு போவது என்று தெரியாமல் பயம் நெஞ்சைக் கவ்வியது. வீட்டுக்குத் திரும்பலாம் என்றால் கையில் பணமும் இல்லை.
பயந்து நடுங்கிய மூன்று பேரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது, உதயசங்கர் தான் வைத்திருந்த செல்போன் மூலம் தனது தந்தைக்குப் போன் செய்தான். தங்களை யாரோ சிலர் கடத்தி வந்து விட்டதாக கூறி போனை வைத்துள்ளான்.
அதிர்ந்து போன உதயசங்கரின் தந்தை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், செல்போன் அழைப்பு எந்த இடத்திலிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் போலீஸ் படை குமணன் சாவடிக்கு விரைந்தது. அங்கு 3 சிறுவர்களும் பரிதவித்து திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து கூப்பிட்டு விசாரித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இனிமேல் இதுபோல விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தரப்பட்டு 3 பேரும் ஒப்பைடக்கப்பட்டனர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications