12 வயது சிறுசுகள் போட்ட கடத்தல் நாடகம்
சென்னை:சென்னை நகரை சுற்றிப் பார்க்க சைக்கிளில் கிளம்பிய 3 சிறுவர்கள், பஸ்சில் ஏறி பாதை மாறி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், பயத்தில் தங்களைக் கடத்தி விட்டதாக பெற்றோரிடம் நாடகமாடி போலீஸாரிடம் சிக்கினர்.
சென்னை அடையார் பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் சுரேந்திரன், திருவான்மியூர் பாண்டியன் என்பவரின் மகன் உதயசங்கர், கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த மாணிக்கத்தின் பாண்டியன் ஆகியோர் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். 3 பேருக்கும் 12 வயதாகிறது.
புதன்கிழமை இரவு சைக்கிளில் மூன்று பேரும் அப்படியே ஹாயாக கிளம்பினர். சென்னை நகரம் இரவில் ஜொலி ஜொலிக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் அதைப் போய் பார்த்து ரசித்து விட்டு வரலாம் என அவர்கள் கிளம்பினர்.
ஆனால் வழியில் சைக்கிள் பஞ்சராகி விட்டது. இதையடுத்து மூன்று பேரும் சைக்கிளை ரோட்டோரம் போட்டு விட்டு பூந்தமல்லி செல்லும் பஸ்சில் ஏறி விட்டனர். கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, பஸ்சின் போர்டில் எழுதப்பட்டிருந்த குமணன் சாவடி என்ற பெயரைப் பார்த்து விட்டு அங்கு கொடுங்க என்று கேட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு பஸ்சில் அமர்ந்தனர்.
குமணன் சாவடி வந்தவுடன் 3 பேரும் இறங்கினர். அடுத்து என்ன செய்வது என்ற பயம் அப்போதுதான் வந்தது. இரவு நேரமாகி விட்டதால் எங்கு போவது என்று தெரியாமல் பயம் நெஞ்சைக் கவ்வியது. வீட்டுக்குத் திரும்பலாம் என்றால் கையில் பணமும் இல்லை.
பயந்து நடுங்கிய மூன்று பேரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது, உதயசங்கர் தான் வைத்திருந்த செல்போன் மூலம் தனது தந்தைக்குப் போன் செய்தான். தங்களை யாரோ சிலர் கடத்தி வந்து விட்டதாக கூறி போனை வைத்துள்ளான்.
அதிர்ந்து போன உதயசங்கரின் தந்தை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், செல்போன் அழைப்பு எந்த இடத்திலிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் போலீஸ் படை குமணன் சாவடிக்கு விரைந்தது. அங்கு 3 சிறுவர்களும் பரிதவித்து திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து கூப்பிட்டு விசாரித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இனிமேல் இதுபோல விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தரப்பட்டு 3 பேரும் ஒப்பைடக்கப்பட்டனர்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications