கத்திச் சண்டை வீராங்கனைக்கு அரசு உதவி
சென்னை:துருக்கியில் நடைபெறும் கத்திச் சண்டைப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பவானி தேவி. கத்திச் சண்டைப் போட்டியில், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல பதக்கங்களைக் குவித்துள்ளார்.
உலக அளவிலான கத்திச் சண்டைப் போட்டி துருக்கியில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பவானி தேவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவானிதேவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இதனால் அவரால் துருக்கி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பவானி தேவி துருக்கி போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக ரூ. 1 லட்சம் நிதியுதவியை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications