இரும்பு குண்டு கடத்தல்: மேலும் 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:விடுதலைப் புலிகளுக்கு இரும்புக் குண்டுகளை கடத்த முயன்ற மேலும் இருவரை சென்னையில் கியூ பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இரும்புக் குண்டுகளைக் கடத்த முயன்று இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர். இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் இரும்பு குண்டுகளை கடத்துவோர் குறித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியிலிருந்து சிலர் இரும்புக் குண்டுகளை இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டுள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பி விட்டனர். இருப்பினும் அங்கு இரும்பு குண்டுகள் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் யார், இலங்கையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸ் தரப்பில் மேல் விவரம் எதுவும் வழங்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+