பந்த்: திரைப்பட ஷூட்டிங்குகள் ரத்து
சென்னைபந்த்தையொட்டி சென்னையில் இன்று திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தியேட்டர்களில் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்த சபைத் தலைவர் கே.ஆர்.ஜி., தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று 2 தியேட்டர்களில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல படப்பிடிப்பும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தடையை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நடைபெரும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பந்த் நடக்கும்போது அதற்கு திரையுலகில் ஆதரவு தெரிவிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த முறை பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலைக் காட்சி மற்றும் பகல் காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications