இலங்கை பஸ் குண்டுவெடிப்பில் 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையின் அம்பாரை நகரில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அம்பாரையில் உள்ள கொண்டவேடுவன் என்ற இடத்தில் ராணுவ சோதனைச் சாவடி உள்ளது. பாதுல்லா -அம்பாரை நெடுஞ்சாைலயில் உள்ள இந்த சோதனைச் சாவடியை இன்று பிற்பகல் ஒரு பயணிகள் பேருந்து கடந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் பேருந்தில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அம்பாரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அம்பாரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications