இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் உயர்நீதிமன்றம் ஸ்தம்பித்தது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் நடந்த இந்த வேலைநிறுத்தப் பேராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கின.
வக்கீல்கள் அனைவரும் ஒவ்ெவாரு நீதிமன்ற அறைக்கும் சென்று வேைலநிறுத்தப் போராட்டம் குறித்து அறித்து வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு கோரியதால் நீதிபதிகள் வழக்குகளை நடத்தாமல் எழுந்து சென்றனர்.
தடையை விலக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோஷமிட்டனர். நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications