For Quick Alerts
For Daily Alerts
Just In
போலி பாஸ்போர்ட்-கத்தார் செல்ல முயன்றவர் கைது
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கத்தார் செல்ல முயன்றவரை விமான நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்,
புதுக்கோட்டையை சேர்ந்த கமல் முகம்மது(35) என்பவர் சென்னையிலிருந்து கத்தார் செல்ல சென்னை விமானத்திற்கு வந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருப்பது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது.
இது குறித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது முகம்மது நெஞ்சு வலி வந்தது போல் நடித்து தரையில் விழுந்து துடித்தார். இதைப்பார்த்தும் போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் குடியுரிமை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் போலீஸார் முகம்மதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Comments
சென்னை airport குடியுரிமை qatar ஏலம் அதிகாரிகள் புதுக்கோட்டை மருத்துவமனை fake passport போலி பாஸ்போர்ட் thanjavur passenger pattukkottai that’s tamil provides tamilnadu news டன் வழங்கும் தளம்
Story first published: Tuesday, April 3, 2007, 5:30 [IST]