முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸ்: கேரளா கண்டனம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸார் நுழைந்து சோதனை நடத்தியதிற்கு கேரளா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேம்சந்திரன் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் தமிழக போலீஸார் அணையை சோதனையிட வந்தது கண்டிக்கதக்கது. அணையின் நிலைமை கண்டறிய வருபவர்களை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் போலீஸ் உடையில் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கேரளா போலீஸார் கண்டனம் தெரிவித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து திரும்பினர்.
அண்டை மாநிலமான தமிழகத்தின் இந்த செயல் இரு மாநிலங்கிடையேயான நல்லுறவுக்கு நல்லதல்ல என்றார்.












Click it and Unblock the Notifications