முடி மூலம் திருப்பதி கோவிலுக்கு ரூ. 33 கோடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:பக்தர்கள் காணிக்கையாக தந்த தலைமுடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிதி ஆலோசகர் அனிதா அகெல்லா கூறுகையில், கடந்த ஆண்டு காணிக்கையாக வந்த முடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்தது.
இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக முடியை விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார் அனிதா.












Click it and Unblock the Notifications