செல்போன் மூலம் ஆபாச பட விற்பனைசென்னையில் வாலிபர் கைது
சென்னை:செல்போன் மெமரி கார்டு மூலம் ஆபாசப் படங்களை கல்லூரி மாணவ, மாணவியருக்கு விற்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள ஆபாச சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பர்மா பஜாரில் இந்திய மற்றும் வெளிநாட்டு நடிகைகளின் ஆபாச படங்களை செல்போன் மெமரி கார்டில் பதிவு செய்து ரூ. 2000க்கு கல்லூரி மாணவ, மாணவியருக்கு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு ஆபாச மெமரி கார்டுகளை விற்ற கும்பலை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் கண்ணில் சிக்காமல் அக்கும்பல் தப்பி வந்தது.
முன்பே நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் இந்த மெமரி கார்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர் போல ஒருவரை அந்த கடைக்கு அனுப்பினர். ஆனால் அந்த கடைக்காரரோ அப்படி ஒன்றும் இங்கு கிடையாது என கூறினார்.
ஆனால் போலீஸ் அனுப்பிய அந்த இளைஞர் மிகவும் வற்புறுத்தி கேட்கவே ரூ.2000 வாங்கிக் ெகாண்டு கார்டைக் கொடுக்க முன்வந்தார் கடைக்காரர்.
அப்போது மறைந்திருந்த போலீஸார் பாய்ந்து சென்று கடைக்காரரை வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து ஆபாச படங்கள் அடங்கிய மெமரி கார்டுகளை கைப்பற்றினர்.
இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த மஜி என்ற மஜீத்(30) கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த 2,200 சிடிக்கள், டிவிடிக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
தனது கடையில் பாதாள அறை அமைத்து அதில் ஆபாச சிடிக்களைப் பதுக்கி வைத்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கு சிடிக்கள் தவிர ஏராளமான செல்போன் மெமரி கார்டுகளும் இருந்தன.
மஜீத் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், என்னிடமுள்ள படங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதால் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு கார்டு ரூ.2000க்கு விற்றேன்.
பல ஆண்டுகளாக இந்த விற்பனையை செய்து வருகிறேன். பல ஊர்களிலிருந்தும் என்னை தேடி வருவார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆள் வைக்காமல் நானே நேரடியாக விற்று வந்தேன்.
வியாபாரம் மிக நன்றாக போய்க் கொண்டிருந்தது. வாரத்திற்கு 1000 சிடிக்கள் வரை விற்று விடுவேன். மெமரி கார்டுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறேன். வெளிநாடுகளிலும் எனக்கு நிறைய பேருடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications