இலங்கை: பஸ்சில் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி
கொழும்பு இலங்கையில் வவுனியா-மன்னார் நெடுஞ்சாலையில் கண்ணிவெடியில் பயணிகள் பேருந்து சிக்கியதில் 7 பேர் பலியானர்கள். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுக் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, பிரமணலங்குளம் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணி வெடியில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் இதில் பேருந்தில் பயணித்த ஒரு ராணுவ வீரர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் வவுனியா மருத்துவமனையில் இறந்தனர்.
படுகாயம் அடைந்த 25 பேர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த வாரத்தில் நடந்த 2வது குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை அம்பாரையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 16 பஸ் பயணிகள் கொல்லபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த சம்பவத்தில் இதில் பேருந்தில் பயணித்த ஒரு ராணுவ வீரர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் வவுனியா மருத்துவமனையில் இறந்தனர்.












Click it and Unblock the Notifications