வெடி விபத்து நடந்தது எப்படி? டிஜிபி விளக்கம்
விழுப்புரம்:200 கிலோ வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கொண்டு சென்றதாலும், அந்த வெடிபொருட்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதாலும்தான் விழுப்புரம் அருகே பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே செந்தூர் என்ற இடத்தில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால், 20 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை டிஜிபி முகர்ஜி நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை மாநிலம் மணலிப்பேட்டையைச் சேர்ந்த சேகர் என்ற வெடிபொருள் விற்பனையாளரிடம் 200 கிலோ வெடிபொருட்களை வாங்கிக் கொண்டு காரில் கொண்டு வந்துள்ளனர்.மிகவும் அஜாக்கிரதையாக இவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இந்த வெடிபொருள் ஒன்றுடன் ஒன்று மோதி உராய்ந்ததால் அவை வெடித்துள்ளன.
இந்த வெடிபொருள், பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் கால்ஷியம் அம்மோனியம் நைட்ரேட் வகை வெடிபொருளாகும்.
சேகர் உரிமம் பெற்ற விற்பனையாளர் என்றாலும் கூட அலட்சியப் போக்கில் அவர் வெடிபொருட்களை விற்றுள்ளார் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.
இதற்கிடையே,சேகர், அவரது தொழிற்சாலை கிட்டங்கியின் காவலாளி மற்றும் வெடிபொருட்களை வாங்கிக் கொண்டு வந்த 2 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications