சாலை விபத்தில் பிரணாப் முகர்ஜி படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:கொல்கத்தாவில் நடந்த சாலை விபத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி படுகாயம் அடைந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சனிக்கிழமை மாலை, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் நக்ஷிபாரா என்ற இடத்தில் கொல்கத்தாவை நோக்கி காரில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு லாரியுடன் அவரது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் முகர்ஜி படுகாயமடைந்தார். அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முகர்ஜிக்கு அறுவைச் சிகிச்சை நடந்ததது. அவரது தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரணாபின் காருடன் மோதிய லாரியின் டயர் வெடித்ததால் அது நிலை தடுமாறு தாறுமாறாக ஓடி பிரணாப் கார் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications