டி.எஸ்.பி. மனைவி தற்கொலை வழக்கு-சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை
திண்டுக்கல்:திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமியும், ராஜசேகரனும் விடுதலை செய்யப்பட்டனர்.
![]() |
தென் மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி. முதல் ஏட்டு வரை காவல்துறையினர் மீது சரமாரியாக புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. பின்னர் இவர் கூறிய புகார்களே பூமராங் மீது ஜெயலட்சுமி மீது திரும்பி அவர் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயலட்சுமி மீது நகை மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில் திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரன் மனைவி விசாலாட்சியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று.
கடந்த 2000மாவது ஆண்டு ஜெயலட்சுமியை ராஜசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராஜசேகரன், ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டது.
![]() |
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம், இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலட்சுமிக்கு ரூ. 5000 அபராதமும், ராஜசேகரனுக்கு ரூ. 8000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் தனித் தனியாக திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இருவர் மீதான குற்றச்சாட்டும் சரிவர நிரூபிக்கப்படவில்லை. எனவே இருவரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இருவரிடமும் வசூலிக்கப்பட்ட அபராதப் பணத்தை அவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் ஜெயலட்சுமி நிரந்தரமாக விடுதலை ஆகியிருக்கும் முதல் வழக்கு இது.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?














Click it and Unblock the Notifications