சாரம் சரிந்து 4 கட்டடத் தொழிலாளர்கள் பலி
சென்னை:சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கட்டட சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சந்திப்புக்கு அருகே புதிய தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. எட்டு மாடிகளைக் கட்டி முடித்து விட்ட நிறுவனத்தினர் 9வது மாடியைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக ஏராளமான தொழிலாளர்கள் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்தது. இதில் 7வது மாடியிலிருந்து 5 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர்.
கீழே போடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் தொழிலாளர்களின் உடல்களை குத்திக் கிழித்தன. கோபால், லைக்கனா, தாமினி, நூஸ்லூன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
டிலால் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications