மதுரையில் பிச்சைக்காரர்கள் வேட்டை:ஒரே நாளில் 40 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரையில் பிச்சைக்காரர்களைப் பிடிக்கும் பணியை போலீஸார் இன்று தொடங்கியுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட ஒரு பொது நலன் மனுவை விசாரித்த உயர்நீதிமனறம், மதுரை நகரில் பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் திரியும் பிச்சைக்காரர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நகரில் எத்தனை பிச்சைக்கார்ரகள் உள்ளனர் என்று போலீஸார் கணக்கெடுத்தனர். இதில் 300 பிச்சைக்காரர்கள் வரை இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து இவர்களைப் பிடிக்க போலீஸார் இன்று நடவடிக்கையில் இறங்கினர். ரயில் நிலையம், பெரியார், அண்ணா, பழங்காநத்தம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள், மீனாட்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்த போலீஸார் அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை வளைத்து வளைத்துப் பிடித்தனர்.

அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்களில் உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். நல்ல நிலையில் உள்ளவர்கள், பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்படுவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+