Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாராயணமூர்த்தி ஜனாதிபதியாகலாம்: கலாம்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் குளோபல் கல்வி மையத்தில் மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர் மைசூர் வந்திருந்தார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி கலாமை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது மாணவர்களில் ஒருவர் கலாமிடம், அடுத்த குடியரசுத் தலைவராக நாராயணமூர்த்தி வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு கலாம், மிகவும் அருமையாக இருக்கும் என்றார் கலாம்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணமூர்த்தி பேசுகையில், அடுத்த குடியரசுத் தலைவராகவும் அப்துல் கலாம்தான் வர வேண்டும். அவர் இளைஞர்களின் மனதில் நிறைந்துள்ளார்.

அவரே மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும். எனக்கு அப்பதவிக்கு வரும் ஆர்வம் இல்லை. எந்தக் கட்சியும் என்னை இதுதொடர்பாக அணுகவில்லை.

காவிரி-கர்நாடகத்திற்குக் கண்டனம்:

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் பந்த், கடை அடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களை நடத்துவது தேவையற்றது, கண்டனத்துக்குரியது. இதனால் எங்களுக்கும், மாநில அரசுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்.

எனது நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் மூட நான் விரும்பவில்லை. ஆனால் பந்த் தினத்தன்று எங்களது நிறுவனத்தை மூட வேண்டியதாயிற்று என்றார் மூர்த்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+