பிரபல ரவுடி புலி சரவணன் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை புறநகரான தாம்பரம் பகுதியைக் கலக்கி வந்த பிரபல ரவுடி புலி சரவணன் கோஷ்டி மோதலில் வெட்டிக் கொல்லப்பட்டான்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவன் புலி சரவணன். அப்பகுதியில் பிரபல ரவுடி. சமீபத்தில்தான் புழல் மத்திய சிறையிலிருந்து அவன் விடுதலையாகி வந்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு தாம்பரம் பகுதியில் இவன் ரத்த வெள்ளத்தில் உடலில் வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் புலி சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதிர் கோஷ்டி ரவுடிகளால் புலி சரவணன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
புலி சரவணன் மீது கொலை வழக்கு, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications