தலைமறைவான சேகர் கோர்ட்டில் சரண்
வேலூர்:விழுப்புரம் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த புதுவை மாநிலம் மணலிப்பேட்டையைச் சேர்ந்த சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விழுப்புரம் அருகே செண்டூர் கிராமத்தில் பயங்கர வெடிபொருட்களுடன் சென்ற ஜீப் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்களை விற்ற சேகர் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர். இன்று அவரது மனைவி, தாயாரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வேலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்பு சரணடைந்தார் சேகர். அவரை வருகிற 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேகரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications