ஆதிகேசவன் பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது
சென்னை:வெளிநாட்டு நிதியுதவி பெற்றுத் தருவதாக சென்னை ஆதிகேசவன் பாணியில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்று, பணம் கொடுக்காத ஆத்திரத்தில், கட்டுமான காண்டிராக்டரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய நைஜீரிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல கோடி பணத்தை ஸ்வாஹா செய்து இப்போது கைதாகி கம்பி எண்ணி வருகிறார்.
அதே பாணியில், சென்னையைச் சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற இரு நைஜீரிய இளைஞர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர், அருகே உள்ள பாடியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரை நைஜீரியாவைச் சேர்ந்த இரு வாலிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெற்றுத் தருகிறோம். அதற்கு அட்வான்ஸாக ரூ. 10 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை சரவணக்குமார் நம்பவில்லை. இருந்தாலும், நேரில் சென்று அவர்களை சந்தித்து என்னதான் கூறுகிறார்கள் என அறிய விரும்பினார் அவர்.
இதையடுத்து அவர்கள் கூறிய இடமான அம்பத்தூர் கனரா வங்கி கிளை அலுவலகம் முன்பு நின்றார். அப்போது இரு நைஜீரிய இளைஞர்களும் அங்கு வந்தனர். பணத்தை தருமாறு இருவரும் சரவணக்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணத்தைக் கொண்டு வராத சரவணக்குமார், முதலில் கடன் உதவி தரும் நிறுவனம் குறித்த தகவல்களைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அதற்குப் பதில் தராத இரு நைஜீரியர்களும், தங்களிடமிருந்து கத்தியால் சரவணக்குமாரை குத்தி விட்டு அவர் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படையை அமைத்த அம்பத்தூர் போலீஸார் சென்டிரல் ரயில் நிலையம், விமான நிலையத்தை முற்றுகையிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இரு நைஜீரியர்களும் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் கப்பென பாய்ந்துப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர் ராபின்சன், ரேமான்ட் ஓசாத் எனத் தெரிய வந்தது. இருவரும் ஏற்கனவே, சில மாதங்களுக்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெகன்னாதன் என்கிற கட்டுமான நிறுவனத்தின் மேலாளரிடம் இதேபோல ரூ. 3.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 18 லட்சம் பணத்தை அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு டெல்லிக்குத் தப்பினர்.
மீண்டும் சென்னைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சரவணக்குமாரிடம் மோசடி செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டனர்.
ஜெகன்னாதனை மோசடி செய்தது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது. இதுதவிர போதைப் பொருள் கடத்தலிலும் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அம்பத்தூர் போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications