ஒரு பக்கம் மழை-மறுபக்கம் கடும் வெயில்
சென்னை:தமிழகத்தின் கோடையின் வெப்ப கொடுமை தாங்க முடியாமல் சிலர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வசஸ்தலங்களிலும் படையெடுத்துள்ளனர்.
ஆனால், ஊட்டியிலும் வெயில் மண்டையை காய வைத்து வருகிறது.
தமிழகத்தில் கோடை வெப்பம் தாக்க தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரு நகரங்களில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது.
அதே போல ஊட்டியிலும் கோடை வெயில் கொடுமை பிளந்து எடுத்து வருகிறது.
இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்தவர்கள் நொந்து ேபாயுள்ளனர்.
இந்த கோடை உக்கிரத்தில் இருந்து தப்பிக்க வரப்பிரசாதமாக திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லையில் மட்டும் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம் கொட்ட ஆரம்பித்துள்ளது.
அதே போல பாபநாசம் அருவிலும் நீர் விழுவது அதிகரித்துள்ளது. சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இங்கு சென்றால் தப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications