பெண் கவுன்சிலரின் காதலை பிரித்த திமுக-தேமுதிக அரசியல்
சென்னை:தன்னை திமுகவுக்கு இழுக்க தனது காதலர் முயன்றதால் காதலரையே தலை முழுகினார் தேதிமுக பெண் கவுன்சிலர்.
சென்னை புளியந்தோப்ப சேர்ந்த உஷா(22), ராஜ்குமார்(22) இருவரும் ஒரே கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டது.
![]() |
படித்துக் கொண்டே கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
ஆனால் இவரது காதலரான ராஜ்குமார் திமுகவை சேர்ந்தவர். இவர் உஷாவை திமுகவில் சேருமாறு வலியுறுத்தினாராம்.
ஆனால், தேர்தலில் எனக்கு வாய்பளித்த தேமுதிக கட்சியை விட்டு வரமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார் உஷா.
![]() |
இந் நிைலயில் திருமணம் செய்து கொள்ளலாம் என ராஜ்குமார் கூறவே, அதற்கும் மறுத்துள்ளார் உஷா.
இதையடுத்து ராஜ்குமார் போலீசில் புகார் கொடுத்தார். தான் காதலித்து வரும் உஷாவை சந்திக்க அவரது அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும், அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் தனது புகாரில் ராஜ்குமார் கூறியிருந்தார்.
ஆனால், இதையெல்லாம் உஷா மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
தேர்தலில் எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் என் அண்ணன் என்னை போட்டியிட வைத்தார். நான் கவுன்சிலரான பின்பு என்னிடம் சிலர் கட்சி தாவும்படி பேரம் பேசினர். ராஜ்குமார் மூலமாக தங்கள் கட்சிக்கு வரவழைக்க முயற்சி நடந்தது.
நான் பணியவில்லை. இந் நிலையில் தான் திருமணத்துக்கு என்னை அவசரப்படுத்தினார் ராஜ்குமார். இதன் மூலம் காதல் முறிய வழி செய்துள்ளார்.
அரசியலுக்காக தன் காதலை தூக்கி எறிந்த ராஜ்குமாரின் காதலை நான் என் கட்சிக்காக தூக்கி எறிகிறேன் என்றார்.














Click it and Unblock the Notifications