நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தயாரா?: அதிமுகவுக்கு துரைமுருகன் சவால்
சென்னை: இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தைரியம் இருக்கிறதா என மாநில பொதுபணித்துறை அமைச்சர் துரைமுருகன் அதிமுகவிற்கு சவால் விட்டுள்ளார்.
சட்டசபையில் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்த பேசிய அவர்,
சட்டசபைக்கு வெளியே என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சபைக்கு உள்ளே வந்தவுடன் மரபுக்குட்பட்டு மட்டுமே பேசவேண்டும். நீங்கள் விமர்சனம் செய்யும் உங்களுக்கு தைரியம் இருந்தால்,இந்த திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறீர்களா என்று கூறுங்கள்.
நாங்கள் தோழமை கட்சியின் துணையுடன் இருக்கிறோம் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அைமச்சர் அன்பழகன், இந்த அரசை விமர்சனம் செய்யும் உங்களுக்கு, திமுகவை தோற்கடிக்கக் கூடிய தகுதி இல்லை. எனவே ஆட்சி மரபுக்கு உட்பட்டு பேசவேண்டும். மெஜாரிட்டி உள்ள ஆட்சியை இவ்வாறு விமர்சனம் செய்வது சரியல்ல என்றார்.












Click it and Unblock the Notifications