செருப்பை காட்டி பதவியில் இருக்கும் அவசியம் இல்லை: அல்போன்ஸ்
சென்னை:எங்கள் பதவியை செருப்பை காட்டி தக்க வைக்கும் அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் உள்ளாட்சிதுறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது அதிமுக எம்எல்ஏவான அன்பழகன், எங்களது ஆட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததாக பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். பலூனை ஊதி உடைக்கப் பார்க்கிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த பீட்டர் அல்போன்ஸ், பலூனை ஊதி உடைக்கும் அவசியம் எனக்கில்லை. மற்றவர்களை போல் செருப்பை காட்டி (அவையில் அன்பழகன் செருப்பைக் காட்டியதை சுட்டிக் காட்டி) பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
இந்திரா குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குவதில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. இந்த முறைகேடுகளை மறைக்க முடியாது. இந்த குற்றசாட்டை நீங்கள் சந்திக்க தயாரா என்றார்.












Click it and Unblock the Notifications